தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு டென்மார்க்கில் 16 தேர்வு நிலையங்களில் 04-06-2011 ஆன இன்று நடைபெற்றது. வளர்நிலை 1 தொடக்கம் ஆண்டு 12 வரை நடைபெற்ற இத்தேர்வில் 1000 மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் தோற்றியுள்ளனர். மாணவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் தேர்வு எழுதியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
டென்மார்க்கில் இருந்துகொலண்ட் நோக்கி மனிதநேய மிதிவண்டிப்பயணம்
டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் முற்பகல் 9:00 மணியளவில் தொடங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களும், டெனிஸ் மக்களும் கலந்து கொண்டு இவர்களின் மிதிவண்டிப் பயணத்தை டென்மார்க் ஸ்ருவர் நகரின் மையப்பகுதியில் தொடக்கி வைத்தனர். மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையவுள்ள இவர்கள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பின்வரும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.
1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே போல நெதர்லாந்து நாட்டின் கேக் நகரில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இதைப் போன்ற விசாரணைகளை நடாத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால சட்டம் ஆகியவற்றை நீக்கி, வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அனைத்துலகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
4. சுயாதீன ஊடகங்கள், அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தடைகளற்று இயங்க சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
5. தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்.
6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும்,2009-2010 ஆம் ஆண்டுகளில் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அனைத்துலகம் உதவவேண்டும்
இக் கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் தமிழர் பேரவையானது 2010 ம் ஆண்டிலிருந்தே நீதிகேட்கும் போராட்டத்தை நடாத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் கேணிங் நகரில் தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி நிகழ்வு.
26-02-2011 சனி அன்று தேசத்தாயை நினைவு கூர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது வணக்க நிகழ்வில் தேசத்தாயின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடறேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு கவிதைகளும் இரங்கலுரைகளும் தேசத்தாயின் நினைவாக இடம் பெற்றது
தமிழர் வாழ எங்கள் தலைவரைத் தந்த தமிழீழத் திருத்தாய்
வே. பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி !!!
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை
21-02-2011
உங்கள் உயிர்பிரிந்து சாவைத் தழுவிய நாளான 20.02.2011 ஞாயிற்றுக்கிழமை
தமிழினத்தின் அதி உச்ச துயரம் நிறைந்த நாளாம்மா. தமிழர் சுதந்திரம் இன்றி அவலத்தோடு
வாழ்ந்தவேளை தமிழர் வாழ எங்கள் தலைவரைப் பெற்ற தாயே, தரணியில் உங்கள்
தற்கொடையால், வீரத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற
வீர மறத் தலைவரை தமிழினம் பெற்றது.
உணர்வுத் தீ மூட்டி உலகம் அதிசயிக்க எங்கள் தேசியத் தலைவரை
உங்கள் கருவறையில் சுமந்து,
அடிமைத் தமிழர் விலங்குடைய சாவுமணியடித்து,
அற்புத மனிதரை தமிழினத்தின் விடியலுக்காய்
தந்த வீரத்தாயே உங்கள் பிரிவுத் துயரால் ஆறாத்துயரில்
தமிழினம் மூழ்கிக் கிடக்கிறதது.
ஈகைத் தாயின் பாதங்களைத் தொட்டு;,
மலர் தூவி வழிபட நெஞ்சம் துடிக்கிறது, ஆனால்
எம்மால் எதையும் செய்யமுடியவில்லை. மனதைக் கல்லாக்கி
உங்கள் பிள்ளைகளோடு இணைந்து பிள்ளைகளாய்
உங்களை வணங்கி நிற்கிறோம். தமிழர் வரலாற்றை மீண்டும் அந்நியர் அறிய வைத்த
கடலடி முத்தை தந்த உங்கள் திருவுருவத்தை நெஞ்சில் நிறுத்தி,
என்றும் அழியா நினைவுப் பொக்கிசமாக மனதில் வைத்துப்
போற்றி வாழ்வோம். தமிழீழ மக்களின் துயரம் தீரும் என்ற
அசையாத நம்பிக்கையுடன், உங்கள்
இறுதி மூச்சுள்ள வரையும் தமிழீழ மக்களோடு கூடி வாழ்ந்து,
அவர்கள் படும் அல்லல் அனைத்தையும்
அனுபவித்து வாழ்ந்த தியாகத் தாயே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் அளப்பெரியது.
நீங்கள் நெஞ்சில் சுமந்து நெருப்பாய் வளர்த்த விடுதலைச்
சிந்தனையை தமிழினம் இறுதி மூச்சுள்ள வரையும்
மறந்து விட முடியுமா? தானைத் தலைவரைத் தந்து உலககெங்கும்
தமிழர் நாமம் ஒலிக்கச் செய்த எங்கள் உயிர்த் தாயே.
தமிழர் வரலாற்றில் மீண்டும் புதிய புறநாநூற்றை எழுத புதுமைத்
தலைவனைத் தந்த உங்கள் வீரவரலாறு
பெருமையுடன் வரலாற்றுச் சுவடிகளில் பதியப்படும்,
தமிழினமும் ஆறாத்துயரோடும்,
சுதந்திர தாகத்தோடும் உங்கள் வீரவாழ்வை நினைவுகூர்ந்து
உங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிற்கும். "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை
தங்கத்தலைவனின் அன்னைக்கு
அன்னை எனும் முன்றெழுத்து
அடிமனதை வருதும் ஓர் உணர்வு
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
மாமா, மாமி, மச்சான், மச்சாள் என
எமக்கெல்லாம் பலராகி விடலாம்
ஆனால் அன்னை எனும் உறவு ஒன்றே
ஒன்றேயாய்த்தான் அமைந்ததால்
அவள் என்றும் பூசிக்கப்படுகின்றாள்.
ஆனாலும் சில அன்னையர் அருமையான
வைரங்களை உவந்தே உலகிற்கு
அளிக்கின்ற படியாலே அவ் அன்னையர்கள்,
எல்லோரிற்கும் அன்னையர் ஆகிவிடுகின்றனர்.
பார்வதி அம்மாவும் தங்கத்தலைவனை
தமிழ் தாயகத்திற்கு தந்ததால் ஆகின்றார்
தாயாக தமிழீழ மக்கட்கு.
கடைசி வரை தாயகத்தில் தானிருந்து
முள்ளிவாய்காலில் முடங்கிய இரகசியங்களை
தன் மூச்சுள்ளவரை உள்ளடக்கி,
தன் மூச்சுக்காற்றை முடித்தார் வல்வையிலே.
உனக்கெனப்பெற்றாய் நால்வரை நீயும்
உன்னருகில் யாருமில்லை இப்போது
என்றாலும், ஈழம் அல்ல முழு உலகும்
அழுகின்றது உனக்காக உளம் உருகி,
உலகத்தொலைக்காட்சிகளில் உன் உருவம்
இணையத்தளங்களில் உன் பேச்சு இன்று முழுக்க.
என்றும் வாழும் எங்கள் தலைவன் பெயர் போல்
என்றும் பேசும் உன் பெயரைத் தமிழீழம்.
விண்ணுலகில் நின்று ஆசீர்வசித்திடு
என்றும் எம் தேச விடுதலைக்கு.
நாடு கடந்த அரசின் டென்மார்க் பிரதிநிதிகள்
சுகேந்தினி நிர்மலநாதன், றெமொன் வாசிங்டன், பொன் மகேஸ்வரன்
வாங்காதே என் நிலத்தை வாழ்விழப்பாய்
என்னடா கொடுமையிது
என்னை அடித்துத் துரத்தி விட்டு
என்னைக் கொன்று விட்டு
என்னை முள்வேலி முகாமுக்குள் முடக்கி விட்டு
என் இன இளைஞர்களை சிறையிலிட்டு
என் இனத்தையே ஓட ஓட விரட்டி விட்டு
என் இடத்தையும் பொருளையும் அபகரித்து
என் நிலைத்தையும் மரத்தையும் கொள்ளையடித்து
என் காணிகளை வேற்று நாட்டானுக்கு விற்பது
நல்ல செயலா
நியாமான செயலா ?
மக்கள் காக்கும் அரசுச் செயலா ?
மக்களை குண்டு வீசிக் கொன்றொழித்து
இடத்தைத் திருடி,
உடைமைகளை திருடி விற்கும் அரசு
மக்கள் நல அரசா ?
என்னடா கொடுமையிது
என்னடா நியாயமிது
பயங்கரவாதத்திற்கும்
என்பொருளை எனக்குத்தா
என்று உரத்துக் கேட்பதற்கும்
வேறுபாடு தெரியாத
நாடுகள் என்ன நாடா ?
நாக்கில் நீர் ஊர அடுத்தவன் இரத்தத்தை
சுவைக்கத் துடிக்கும் அரசு என்ன அரசா ?
நெஞ்சில் ஈரமில்லையா ?
என்னை என்நாட்டில் என்வீட்டில் வாழ விடாமல்
போர் செய்து என் இடத்தை அடுத்தவனுக்கு
விறபதன் வலி எனக்கல்லவா தெரியும்
விற்பவனை விட வாங்குபவனே குற்றவாளி
நீ வாங்கும் நிலம் என்னுடையது
நீ வாங்கும் ஒவ்வொரு சதுர அடியும் நான் விளையாடியது
இன்று நான் துண்டு துண்டாக சிதறியிருக்கலர்ம்
என் நிலத்தை நீ வாங்கினால் நீயும் துண்டு துண்டாவாய்
வாங்காதே அப்படியே வாங்கினால்
எண்ணிக் கொண்டிரு நீ அங்கிருந்து
ஓட்டப்டும் நாளை
வில்லங்கம் உடைய நிலத்தை வாங்குவது
குற்றம் என்று உனக்குத் தெரியாதா
வாங்காதே என் நிலத்தை – அப்படியும்
வாங்கினால் வாழ்விழந்து வீழ்வாய் ஓருநாள்.
தமிழ்க்கனல்
.........................
சிறிலங்கா தேசியகீதம்
தமிழீழத்தில் சிறிலங்கா தேசியகீதம் சிங்களத்தில் பாடப் போகிறார்களாம். இதுக்கு வேற பாரளுமன்றத்தில் சட்டமும் நிறைவேற்றி இருக்கிறார்களாம்.அப்பதான் தமிழீழத் தேசிய கீதம் எது தமிழர்களின் தேசியக் கொடி எது என்று தமிழ் மக்களுக்கு ஞாபகம் இருக்கும்.
தமிழீழத்தின் தேசியக் கொடியும் கீதமும்
ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி
ஏறுது பார் கொடி ஏறுதுபார்
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது - பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது
ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
வீரவணக்கம்
சிங்கள சிறைகளில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட இசைப்பிரியா உற்பட அனைத்து போராளிகளுக்கும் எமது வீரவணக்கம். உலக வல்லரசுகளை தன் பக்கம் சாய்த்துக் கொண்டு எமது மக்கள் மீது வண் கொடுமை புரியும் சிங்கள அரசுக்கு பதில் விரைவில் கொடுப்போம். இராவணனைக் காட்டி கொடுத்த குரங்குகள் ஆட்சியில் இருக்கும் வரை பொறுமை காத்திருப்போம் பாய்வதற்கு.
எமது தேசியத் தலைவர் உண்மையில் ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு அல்ல. சிங்களவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் போராட புறப்பட்ட ஒருவரே.
மாவீரர் நாள் நிகழ்ச்சி 2010 டென்மார்க்
காணோளி
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2010
டென்மார்க் மகளிரமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட. 2ம் லெப் மாலதியின் நினைவு நிகழ்வு ஓகூஸ் நகரில் 13-11-2010 சனி அன்று நடைபெற்றது. இதில் 2ம் லெப் மாலதி மற்றும் அன்னை பூபதியின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின இவ் நிகழ்வு எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகம் என விரிந்திருந்தது.
மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் 11-09-2010 அன்று டென்மார்க் கேர்ணிங் நகரில் கலைநிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் Fyn, Jylland ஆகிய மாநிலங்களில் உள்ள மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் பங்குபற்றிப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை வழங்கினர். இங்கு பேச்சு, கவிதை, நாடகம், நாட்டியநாடகம், பரதநாட்டியம், எழுச்சி நடனம், இசைநிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இக்கலைநிகழ்வில் நாநூறுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து பார்வையிட்டனர்.கிழே படங்களை காணலம்
ஐரோப்பிய ரீதியில் வருடம் தோறும் நடைபெறும் கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வானது இம்முறை சனிக்கிழமை ( 04-06-2010 ) அன்று 19 கழகங்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக நடந்தேறியது. இதில் நோர்வே, பிரான்ஸ், இலண்டன் ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றி இருந்தன. நிகழ்வின் படங்களை மேலே பார்க்கலாம்.
போட்டி முடிவுகள் ..
16 வயதுக்குட்பட்டோர்
முதலாவது இடம் - v.l.v tiger
இரண்டாம் இடம் - france
17 வயதுக்கு மேற்பட்டோர்
முதலாவது இடம் . fc mojen sonerborg
இரண்டாம் இடம் - dantam – 1
மூன்றாம் இடம் . black star