8-09-2007 அன்று டென்மார்க்கில்கோசன்ஸ் மாநகரத்தில் 14ஆவது ஆண்டாக கரும்புலிகள் ஞாபகார்த்த ஐரோப்பியக்கிண்ணம் நடைபெற்றது. இதில் சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மன் நோர்வே சுவீடன் உட்பட 37 அணிகள் கலந்துகொண்ட 7நபர் உதைப்பந்தாட்டமாகும்.


இதில் தமிழீழத் தேசியக்கொடியை டென்மார்க் மாநிலப்பொறுபாளர் திரு.நேசன் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து டென்மார்க்கொடியை தமிழ்க்கூட்டமைப்பு செயலாளர் திரு.கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்ததுடன் கரும்புலிகளின் பெயர்கள் சூட்டப்பட்ட மைதானங்களில் போட்டிகள் ஆரம்பமானது. 16 வயதிற்க்குட்பட்ட 16 அணிகளும்
17 வயதிற்கு மேற்பட்ட 22 அணிகளும் கலந்து கொண்டன.


16வயதிற்குட்பட்டோருக்கான ஐரோப்பியக் கிண்ணத்தை சுவிஸ் நோர்வே வீரர்களைக்கொண்ட சாள்ஸ் அன்ரனி விளையாட்டுக்களகம் தட்டிக்கொண்டது. 2ம் இடத்தை ஜேர்மனியிலுள்ள கம்நகரத்தை சேர்ந்தஅணியும் . 3ம் இடத்தை டென்மார்க்கின் ஓகூஸ் அணியும் வென்றனர்.


16 வயதிற்க்குட்பட்ட 2007 இற்கான சிறந்த உதைப்பந்தாட்ட வீரனாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பிறான்;ஸிஸ் குமாரும்
17வயதிற்கு மேற்;பட்டோருக்கான ஐரோப்பியக்கிண்ணத்தை நோர்வே நாட்டைச் சேர்ந்த நோத் வொய்ஸ் அணியும் 2ம் இடத்தை Nஐர்மன்நாட்டைச்சேர்ந்த அன்னைபெற்றாலும் 3இடத்தை டென்மார்க் கேர்ணிங்கின் டென்ராம் அணியும் தட்டிக்கொண்டன.


இந்தஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரனாக செல்வராசா சுரிஸ்கரனும் பெற்றுக் கொண்டனர்.இதில் நூற்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து உட்சாகப்படுத்தினார்கள்.


|